என் நாடி நரம்புகளை
நாராய் எடுத்து
நீ சிந்தும்
புன்னகைப் பூக்களை
சரமாய் தொடுத்து…
மனம் வாடி வதங்கி
சோரும் போதெல்லாம்
பார்த்து மகிழ்ந்திருந்தேன்!
எப்போவாவது
எங்கோ ஒரு தொலைவிலிருந்து
நீ அன்பாய் பேசும்
நாலு வார்த்தையில்
என் இதயம் நனைத்து
சோகம் தொலைத்து…
நிம்மதிப் பெருமூச்சு விட்டு
என் மனப் பாரங்களையெல்லாம்
இறக்கிக் கொள்வேன்!
ஓ…!
எல்லாமே
இன்றோடு தொலைந்து போகிறது!
ம்…!அன்பின் கிளைகளும்
ஆழமான வேர்களும்
அடியோடு அறுக்கப்பட்டு
இழப்புகளை மட்டுமே
இதயம் தாங்கி…
இடிந்த மனமும்
அழுகையிலேயே தோய்ந்து
தூர்ந்த விழிகளும்…
ஓ…!
இது நான் வாங்கி வந்த வரம்!
இதற்கு நீ என்செய்வாய்…?
விடை தருகின்றேன்
நீ போய் வா!
No comments:
Post a Comment