Wednesday, July 23, 2008

காதல் அழிவதில்லை…

நீ கண்கள் மூடி
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.

#

அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றைஅணைத்து
விடுகின்றன.

#

சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி.
‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’
என நீ கேட்கிறாயா?
பலியாடாக நான் தயார்.

#

தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.

#

திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?

#

நிதமும்
கனவில் நீ வரும்
இரவுகளுக்காக பிராத்திக்கிறார்
கடவுள்.

#

‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள்.

#

திருவிழாவுக்காக இல்லை,
எல்லோரும்
நீ வார்க்கும் பாலை மட்டும்
பிரித்துக் குடிக்கும்
அன்னப்பாம்பை
பார்க்க வந்தவர்கள்.

#

காதல் அழிவதில்லை…

2 comments:

Karthik said...

me the firstu??

FunScribbler said...

//திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?//

அட அட அட... என்னமா எழுதுறீங்க.. ரொம்ப சூப்பர்ர்ர்!! இன்னும் எழுதுங்கள்!! வாழ்த்துகள் கார்த்திக்!