நட்பாய் என்னில் அமர்ந்து
காதலாய் என்னில் உறங்கி
இன்று கானலான
எனது நாட்குறிப்பின்
நனைந்து போன பக்கங்கள்
கண்ணீரில்....
இனியும் மறக்கவில்லை ..
உனை பார்த்த
அந்த முதல் நாளை ...
நல்ல நட்பு...
நல்ல நண்பன் ...
இப்படிதானே இறுமாப்போடு
இருந்தேன் நானும்...
நல்ல தோழியாய்
நானும் உன்னில்...
நடை பயில்கையில் ...
நாளொரு நாடகம்
பொழுதொரு கவிதையென .
நீயும் என்னை சுற்றி..
பூமியும் நிலவை சுற்றுமென
எனக்கும் காட்டி தந்தாயே ...
உன்னோடு பேச
ஆரம்பித்த பின்தானே .
பூக்கள் உதிரும்
ஓசை கூட
கவிதையாய் தெரிந்தது
என் கண்களுக்கு ...
உனது தோழனின் காதலுக்கு
உதவ எனையும் நீ ...
தொல்லை செய்தபோதல்லவா
உன்னிலான காதல்
என்னில் நங்கூரமிட்டது ...
ஆர்பரிக்கும்
கடலலைகளிடையே அசையாமல்
நீயும் ஆணிவேராய் ...
ஆச்சரியத்தில் நானும்
அலைமோதிய
நாட்கள்தான்
எத்தனை ....
2 comments:
நல்லாருக்கு.
plz remove this Word Verification.
Post a Comment