Friday, July 18, 2008

மனதில் நம்பிக்கை


எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருப்பது முக்கியந்தான். ஆனால் அது எப்போதும் கை கூடுவதில்லை. அதன் பக்க விளைவு ரசிக்கும் படியும் இருப்பதில்லை. குறைந்த பட்ச எதிர்பார்ப்போடு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்த்து ரசிக்கலாம் என்னும் சிந்தாந்ததில் எனக்கு நிறைய நேரம் நம்பிக்கை ஊஞ்சலாட்டம் நடக்கின்றது.


பிரச்சனைகள் தீர்வதில்லை, ஒத்தி வைக்கப்படுகின்றன. ஒத்தி வைக்கப்பட்ட நேரத்தில் கொஞ்சம் கொறித்து கொள்ள சந்தோஷமும் அவை சார்ந்தவைகளும். சுய எதிர்பார்ப்பில் ஏதேனும் பங்கம் வருகையில் கொறிப்பதை தூக்கி எறிந்து பிரச்சனையை மீண்டும் பொதுவில் வைத்து கம்பெடுத்து சுலற்ற வேண்டியதுதான், அடுத்து கொறிக்க ஆசை வருகையில் கம்பை தூக்கி போடலாம், இல்லாவிட்டால் கை வலித்தால் கம்பை தூக்கி போடலாம்.

No comments: